செங்கல்பட்டு மாவட்டத்தில் கடன் வழங்குவதாக ரூ.2 கோடி மோசடி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடன் வழங்குவதாக ரூ.2 கோடி மோசடி.

Update: 2021-08-15 06:14 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே மேலேரிபாக்கத்தில் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணத்தை கடனாக பெற முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் தவணையாக ரூ.1,000, 2-வது தவணையாக ரூ.5 ஆயிரம், ரூ.1 லட்சம் கடனாக பெற ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுவினரிடமும் கடன் வழங்குவதாக பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல ரூ.2 கோடிக்கும் அதிகமாக பணம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை பறிகொடுத்த படாளம், வையாவூர், செங்கல்பட்டு பகுதியை சுற்றியுள்ளவர்கள் செங்கல்பட்டில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்