காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி பெண் பலி

காவேரிப்பட்டணம் அருகே கார் மோதி பெண் பலியானார்.

Update: 2021-08-17 16:30 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள துடுகனஅள்ளியை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 34). சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் தனது அக்கா செல்வி (35) என்பவருடன் சவுளூர் மேம்பாலத்தில் இருந்து காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு சர்வீஸ் சாலை பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வியும், பச்சியப்பனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வி பரிதாபமாக இறந்தார். பச்சியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்