ஓசூரில் பழ வியாபாரி கொலையில் ஆட்டோ டிரைவர் கைது

ஓசூரில் பழ வியாபாரி கொலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-17 16:30 GMT
ஓசூர்:
ஓசூரில் பழ வியாபாரி கொலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பழ வியாபாரி கொலை
ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதா (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சோனியா (25). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் பிரிந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாதேஷ் குடிபோதையில் தனது மனைவியின் அண்ணனான ஓசூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பழ வியாபாரி விக்கி (31) என்பவரிடம் போனில் பேசி தகராறு செய்தார். இது தொடர்பாக கேட்பதற்காக விக்கி, மாதேசின் வீட்டிற்கு சென்றார். 
ஆட்டோ டிரைவர் கைது
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ், தான் வைத்திருந்த கத்தியால் விக்கியை குத்திக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதனிடையே பழ வியாபாரியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் மாதேசை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்