கள்ளக்குறிச்சி அருகே வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விபரீதமுடிவு

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-08-20 17:22 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் வெங்கடேசன் (வயது 33). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்