புனேவில் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

Update: 2021-08-21 07:28 GMT
இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 58 பெட்டிகளில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 970 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் மத்திய தொகுப்புக்காக புனேவில் இருந்து சென்னைக்கு 27 பெட்டிகளில் வந்த 3 லட்சத்து 24 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்