ஓசூரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் தற்கொலை

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-08-22 16:51 GMT
ஓசூர்:
ஓசூர் ஆவலப்பள்ளி அருகே பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிகிரண் (வயது 30). எலக்ட்ரீசியன். கடந்த சில நாட்களாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த ரவிகிரண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரவிகிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சாகர் குமார் பிரதான் (22). இவர் ஓசூரில் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்