வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்து 326 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பரவல் மக்களிடையே இருந்து வருகிறது. நேற்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் 19 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.