வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Update: 2021-08-26 21:52 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகுவிளை மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், வேலைக்கு செல்லாமல் இருந்ததால், செல்வகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வகுமார், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்