இளநிலை பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்

இளநிலை பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்

Update: 2021-08-27 17:02 GMT
கூடலூர்

கூடலூர் கோழிபாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை கல்லூரியில் தொடங்கியது. 

மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.  பின்னர் கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று கொண்டு தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் உடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

அடுத்த மாதம் 3-ந் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்