ஆம்பூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

Update: 2021-08-27 17:21 GMT
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த கண்ணாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சரண் (வயது 10). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்துள்ளான். இந்தநிலையில் நேற்று விண்ணமங்கலம் அருகே உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சரண் திடீரென தண்ணீரில் மூழ்கி உள்ளான். இதை கண்ட நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.

 இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சரணை மீட்டனர். ஆனால் அதற்குள் அவன் இறந்துவிட்டான். ஆம்பூர் தாலுகா போலீசார் மாணவநின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்