ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
13 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. நேற்று 13 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியானார். மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 162 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதல் தவணை தடுப்பூசிகள் 8,585 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசிகள் 1,844 பேருக்கும் போடப்பட்டது.