வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கியவர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கியவர் கைது

Update: 2021-08-27 20:01 GMT
திருச்சி, ஆக.28-
திருச்சி காஜாமலையை சேர்ந்தவர் விஜயலெட்சுமி. வட்டார வளர்ச்சி அலுவலரான இவருடைய மகன் வெங்கடேன் (வயது 20). இவர்களுக்கு சொந்தமாக சங்கிலியாண்டபுரம் அன்புநகரில் வீடு உள்ளது. பக்கத்து வீட்டில் விஜயலெட்சுமியின் தம்பி சங்கீத்குமார் (46) வீடு உள்ளது. இவர்களுக்குள் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று வெங்கடேசனுக்கும், சங்கீத்குமாருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கீத்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்