உத்தமபாளையத்தில் வீடு புகுந்து 11 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு

உத்தமபாளையத்தில் வீடு புகுந்து 11 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-08-28 16:28 GMT
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் வடக்குத்தெரு, பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பரக்கத் நிஷா (வயது 53). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தம்பி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதனால் அவரது வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சம்பவத்தன்று பரக்கத் நிஷாவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். 
அப்போது வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த பரக்கத் நிஷா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
இதுகுறித்து அவர் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்