திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நேற்று வரை 374 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 253 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 52 ஆயிரத்து 228 பேர் குணமடைந்து உள்ளனர். 651 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துைற அதிகாரிகள் தெரிவித்தனர்.