கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

Update: 2021-08-29 09:09 GMT
ஊட்டி

ஊட்டி எட்டின்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மத்திய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த வீர சிவகுமார் (வயது 54) என்பதும்,  இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்