திருமணம் செய்ய விரும்பாததால் இளம்பெண் தற்கொலை

திருமணம் செய்ய விரும்பாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-29 09:09 GMT
கல்லாவி:
ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் அங்கமுத்து. இவருடைய மகள் கவுசல்யா (வயது 18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் கவுசல்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தற்போது திருமணம் செய்ய விரும்பாததால் இதற்கு கவுசல்யா எதிர்ப்பு தெரிவித்தார். 
இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த கவுசல்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்