குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு
குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் செக்கடி தெருவில் குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.