லாரியில் மணல் கடத்தியவர் கைது

பாளையங்கோட்டையில் லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-29 19:32 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் கே.டி.சி. நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் எம்.சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 35) என்பதும், அவர் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க பாண்டியனை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்