கார் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகாயம்

கார் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-29 19:43 GMT
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள சின்ன பட்டக்காடு கிராமத்தில் வசிப்பவர் உத்திராபதி(வயது 41). இவர் நேற்று ஒரு மொபட்டில் தனது மகள் சவுந்தர்யா(18), மகன் அஜித்குமார் (13) ஆகியோருடன் அரியலூர் வந்துள்ளார். பின்னர் அவர்கள் மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அரியலூர் புறவழிச்சாலையில் அம்மா குளம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து கீழப்பழுவூர் நோக்கி வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்