திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

Update: 2021-08-30 11:16 GMT
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த நபர் நீல நிறத்தில் டீ சர்ட்டும், கருப்பு, நீல நிற அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார்.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்