கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-30 17:15 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோதினி (வயது25). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தையல்நாயகி தோட்டம் காளி யம்மன்கோவில் தெரு பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பதிவு திருமணம் நடந்துள்ளது. இதன்பின்னர் சுப்பையா சுரேஷ் நெதர்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரும்பி வந்ததும் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம், பொருட்கள் வரதட்ச ணையாக வழங்கினார் களாம். திருமணம் நடந்த நாள் முதல் சுப்பையா சுரேஷ் மனைவி வினோதினியிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் வாங்கிவரும்படி கூறி கொடுமை படுத்தினாராம். தினமும் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். இதற்கு அவரின் தந்தை லோகநாதன், தாய் தெய்வநாயகி, சகோதரன் அருண்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்து தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தார் களாம். இதுகுறித்து வினோதினி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்