ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை, பணம் திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை, பணம் திருட்டு போனது

Update: 2021-08-30 18:38 GMT
புதுக்கோட்டை
சென்னையை சேர்ந்த லோகநாதனின் மனைவி சாந்தி (வயது 40). இவர் புதுக்கோட்டையில் உறவினர் ஒருவரது வீட்டிற்கு வந்திருந்தார். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார். அப்போது சாந்தி வைத்திருந்த கைப்பையில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்