வீட்டின் ஓடுகளை பிரித்து நகை -பணம் திருட்டு

வீட்டின் ஓடுகளை பிரித்து நகை -பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-08-30 19:27 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி(வயது 55). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்க்க காட்டிற்கு சென்று விட்டு மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை பிரித்து வீட்டிற்குள் குதித்து, அங்கு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராசாத்தி கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்