தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Update: 2021-08-31 16:42 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் தற்போது 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26 ஆயிரத்து 848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்