போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

விருதுநகர் பகுதியில் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-01 19:22 GMT

விருதுநகர்.

விருதுநகர் பகுதியை சேர்ந்த 42 வயதான கூலி தொழிலாளிக்கு, 38 வயதில் மனைவியும், 13 வயதில் மகளும் உள்ளனர். மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மகளை அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்