பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
களக்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் களக்காடு பெரிய தெருவில் சோதனை நடத்தினர். அப்போது நெல்லையில் இருந்து வந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர். இதில் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் மற்றும் டீ, கப் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.