கொத்தனாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
காரியாபட்டி அருகே கொத்தனாருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கொத்தனாருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு
இது சம்பந்தமாக செல்வஅதிபதிக்கும், கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகியோருக்கும் இடையே நேற்று ஆவியூர் சமுதாயக்கூடம் அருகில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் செல்வ அதிபதியை சரமாரியாக வெட்டினர்.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது தொடர்பாக கர்ணன், லிங்கேஸ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.