மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

வள்ளியூரில் மருந்து விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-01 20:19 GMT
வள்ளியூர்:
வள்ளியூர் சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). நெல்லையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுப்பிரமணியன் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்