ரூ.75 லட்சம் உண்டியல் காணிக்கை

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.75 லட்சம் காணிக்கை கிடைத்தது.

Update: 2021-09-01 20:51 GMT
சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொத்தம் 15 உண்டியல்கள் உள்ளன. தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உள்ள 8 உண்டியல்களில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.74 லட்சத்து 91 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. அதோடு 228 கிராம் தங்கமும், 1 கிலோ 100 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் அய்யப்ப சேவா சங்கம், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணிகளை இந்து சமய அறநிலைய துறை விருதுநகர் கோவில் உதவி ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி, சவுந்திரராஜன், இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் பார்வையிட்டனர்.


மேலும் செய்திகள்