தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-02 19:48 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கட்ராங்குளத்தை சேர்ந்த நடராஜனின் மகன் அரவிந்த்(வயது 23). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த், ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பெரம்பலூர் மகிளா கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அரவிந்த், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அரவிந்தை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பெரம்பலூர் மகிளா கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து அரும்பாவூர் போலீசார், தலைமறைவாக இருந்த அரவிந்தை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்