தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-02 20:38 GMT
தென்காசி:
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தி நூதன போராட்டம் நடத்தினர். தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், நகர துணைத்தலைவர் சொர்ண சேகர், நகரச் செயலர் மாதேஷ், நகர செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், மூத்த உறுப்பினர் ஈஸ்வரன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கோமதி சங்கர், இந்து ஆட்டோ முன்னணி நடராஜன், சுப்புராஜ், ஆறுமுக கனி, நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், விஷ்வ இந்து பரிஷத் நகர தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்