மேலும் 11 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே 5 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 96 பேர் சிகிச்சையில் உள்ளனர்.