திருச்செந்தூர்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2021-09-03 16:23 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு கிழக்கு தெருவை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது55). கூலி தொழிலாளியான இவருக்கு சோபியா என்ற மனைவியும், ஜெனிபர் (20) என்ற மகளும், ஹென்றி இன்பராஜ் என்ற மகனும் உண்டு. 
இதில் ஜெனிபர் நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் ஜெனிபர் தனது வீட்டின் மாடியில் இருக்கும் போது திடீரென்று உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறியடித்து கொண்டு கீழே ஓடி வந்துள்ளார். தாய் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஜெனிபரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்