கடையநல்லூர் அரசு கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு
கடையநல்லூர் அரசு கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக பணியாற்றிய முரளிதரன் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வராக முரளிதரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.