கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்

Update: 2021-09-03 20:40 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 22 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்