கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-09-04 16:48 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா மற்றும் கல்லூரி முதல்வர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்தனர். திருஉத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முகாமை நடத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுதர்சன், ரோட்ராக்ட் சங்க திட்ட அலுவலர் அருண் பிரசாத் மற்றும் நிர்வாக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்