போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-04 19:37 GMT
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சேகர் (வயது 22). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்