நெல்லையில் 10 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 492-ஆக உயர்ந்துள்ளது. 47 ஆயிரத்து 926 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 136 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.