அரசு பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2021-09-04 20:23 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரகுபதி நினைவு நூலகம் ரூ.13.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊர் பிரமுகர்கள் ரங்கநாதன், மோகன்ராம், குமாரசாமி, ராதாகிருஷ்ணன், ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்