வாலிபர் மீது காரை மோதவிட்டு கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

புளியரை அருகே வாலிபர் மீது காரை மோதவிட்டு கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-04 21:06 GMT
தென்காசி:
புளியரை அருகே வாலிபர் மீது காரை மோதவிட்டு கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கொல்ல முயற்சி

தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 29). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் மகேஷ் (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 8-8-2015 அன்று மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் புளியரை அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்ேபாது, சரவணன் மகேஷ் ஒரு காரில் வந்து மோகன்ராஜ் மீது மோதினார். இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் மகேஷை கைது செய்தனர்.

7 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு தென்காசி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா, சரவணன் மகேசுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னத்துரை ஆஜரானார். சரவணன் மகேஷ் சமீபத்தில் கேரளாவிற்கு செல்பவர்களுக்கு போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்