பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை.

Update: 2021-09-05 03:11 GMT
சென்னை,

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 23). அதே பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும், ஆஷா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது திடீர் நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுபாஷ் நேற்று முன்தினம் இரவு மெரியமேட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்றார். ஆஷா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அங்கு சுபாஷ் இல்லாததால், பெரியமேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். நீண்டநேரம் வீட்டின் கதவை தட்டியும் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

வீட்டின் உள்ளே சுபாஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். சுபாஷ் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்