பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர் மீது வழக்கு

பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-09-05 11:27 GMT
திருவண்ணாமலை

பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

சென்னையை சேர்ந்தவர் 35 வயது பெண் இவர் அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி படித்து வந்துள்ளார். இவர் சுனாமி பாதிப்பின் போது புராஜக்ட் வேலை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (45) என்பவர் அறிமுகம் ஆனார். 

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 2007-ம் ஆணடு அந்த பெண்ணை அவர் அழைத்து வந்து திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வீடு எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். 

இதனால் கர்ப்பம் அடைந்த அவருக்கு கருக்கலைப்பு செய்து, தனக்கு அரசு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் வேளாண்மை துறையில் உதவி அலுவலராக சிவகுமாருக்கு அரசு பணி கிடைத்தது.

 இதையடுத்து அவர் காதலியிடம் எதுவும் சொல்லாமல் தனியாக விட்டு, விட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்