விபத்து

வெவ்வேறு விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-09-05 18:36 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு தெற்கு பாரைப்பட்டியை சேர்ந்தவர் குணசேகர் மகன் முருகன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் முருகனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (37). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் கங்காகுளம்-எஸ்.என்.புரம் ரோட்டில் வந்தபோது அவ்வழியாக சென்ற இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனத்தில் வந்த சித்திக் (30) என்பவருக்கும், சந்தோசுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்