பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், கடைவீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், வாகனங்களுக்கும் இடையூறாக இருந்த விளம்பர பதாகைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது. அப்போது ஆணையர்கள் நலதேவன், காமராஜ், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.