பேக்கரி கடையில் தீ விபத்து

பேக்கரி கடையில் தீ விபத்து.

Update: 2021-09-07 01:59 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 42). இவர், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பேக்கரி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி பேக்கரி கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பேக்கரி கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்