9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.

Update: 2021-09-07 02:57 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி(வயது 14). இவர், அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா பரவல் சற்று குறைந்து இருப்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சிவசக்தி, சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிவசக்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்