கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.

Update: 2021-09-08 20:40 GMT
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும்  புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 92 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 79 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 150 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் பெரம்பலூர் மாவட்டத்தில் 918 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 955 பேருக்கும் வர வேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 3,011 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 4,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்