தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்குப்போட்டு ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-08 20:43 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்கள் குடும்பத்தினருடன் சத்திரப்பட்டி அருகே மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர். கணவன் - மனைவிக்கு இடைேய  அடிக்கடி தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குன்னூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்ற சுப்பிரமணியன் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்