தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரொனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது

Update: 2021-09-09 14:41 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 584 ஆக உள்ளது. நேற்று 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 77 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 400 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்