இணையவழி கருத்தரங்கு

இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2021-09-09 18:02 GMT
இளையான்குடி, 
இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் சென்னை-இந்திய லிட்டரசி அமைப்பு சார்பில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு "இந்தியாவின் வளர்ச்சியில் எழுத்தறிவு மற்றும் கல்வியின் பங்களிப்பு"எனும் தலைப்பில இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அப்ரோஸ் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை- இந்திய லிட்டரசி அமைப்பு தலைவர் ரெங்கராஜன், திட்ட உதவியாளர்கள் ஹேமலதா அம்பலவாணன் மற்றும் சூரியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பீர் முகமது, அஸ்மத்துபாத்திமா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செய்யது யூசுப் நன்றி கூறினார். கருத்தரங்கில் 40 மாணவ- மாணவிகள் இணையவழியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்து பயன்பெற்றனர்.

மேலும் செய்திகள்